காதர் மஸ்தானிற்கு இராஜாங்க அமைச்சர்

musthapa
musthapa

தனக்கு வழங்கப்பட இருந்த இராஜாங்க அமைச்சு பதவியை, காதர் மஸ்தானிற்கு வழங்குமாறு பைஸர் முஸ்தபா முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது நாளை பைஸர் முஸ்தபா அவர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்க தீர்மானிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் பதவியை காதர் மஸ்தானிற்கு வழங்குமாறு பைஸர் முஸ்தபா அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வருகிறது.