ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தின் புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று (Nov.27) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இராஜாங்க அமைச்சர்கள் கடந்த திங்கட்கிழமை பதவிப் பிரமாணம் செய்யவிருந்த நிலையில் இதற்கான திகதி பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.