பதுளை உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் 7 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அண்மித்து வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஊவா மாகாணத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் மேலும் அறிவித்துள்ளது.