முகக்கவசம் அணியாதவர்களை சட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இன்று (05) முதல் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை போன்ற தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, இன்று முதல் பி.சீ.ஆர். மற்றும் ரெபிட் அன்டியன் பாிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படுவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.