இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 1
202009280529000009 In Maratha New to 18 thousand people Corona kills 380 people SECVPF 1

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (04) ஒரேநாளில் 16 ஆயிரத்து 660 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 34 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 99 இலட்சத்து 75 ஆயிரத்து 340 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 2 இலட்சத்து 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொற்றாளர்கள் அதிகமாக குணமடையும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கின்றது. மேலும் நேற்று ஒரேநாளில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 49 ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது.