அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த 12 பேர் கைது

kaithu

பொழுதுபோக்கிற்காக அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த சிலர் நேற்று (14) மாலை பிலியந்தல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 12 பேரும் 18 வயதிற்கும் 25 வயதிற்கும் உட்பட்டவர்கள் என் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.