இலங்கையில் மேலும் 431 பேருக்கு கொரோனா!

111397315 gettyimages 1204793213 1
111397315 gettyimages 1204793213 1

இலங்கையில் மேலும் 431 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 56,778 ஆக அதிகரித்துள்ளது.