நெலுவ-மெதகம பகுதியில் வீடொன்றில் இருந்து நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த கொலை சம்பவம் நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த 45 வயதானவர் என கூறப்படுகின்றது.
மேற்குறிப்பிடப்பட்ட நபரை சந்தேக நபர் ஒருவர் கொலை செய்துவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.