டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்த 3 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
நேற்று மற்றும் இன்றைய தினம் வைத்தியசாலைக்கு பிரவேசித்த போது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே அவர்களுக்கு தொற்றுறுதியானதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு, பேராதனை மற்றும் வலப்பனை பகுதிகளை சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதுடன், அவர்களில் இருவர் நோர்வுட் முதல் பொகவந்தலாவை வரையான வீதி புனரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் என தெரியவந்துள்ளது.