தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற அரிசி விற்பனையாளர்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கும் நிகழ்வு!

8bb1c216 794e 4ba5 bf19 a385ae768c5f
8bb1c216 794e 4ba5 bf19 a385ae768c5f

நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் வேண்டுதலுக்கமைய கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தினால் நெல் கொள்வனவு செய்யும் அரிசி விற்பனையாளர்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கும் நிகழ்வு 20/02/2021 அன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜாவினால் ஒழுங்கு செய்யபட்ட இந்நிகழ்வில் கௌரவ அமைச்சர் பந்துல குணவர்த்தன ,கௌரவ இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வன்னே ஆகியோர் கலந்துகொண்டு 30 மில்லியன் பெறுமதியான காசோலைகளை வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கௌரவ வியாளேந்திரன் மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் கூட்டுறவுச்சங்க முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.