மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் நாராஹேன்பிட அபயராமாதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய முறுத்தெட்டுவே ஆனந்த தேரரினால் எழுதப்பட்ட இரு நூல்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (26) பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டது.
´ரன் ஹீய´ மற்றும் ´ஹெல வெதகமே யடகியாவ´ (சுதேச வைத்தியத்தின் வரலாறு) ஆகிய இரு நூல்கள் இவ்வாறு கலாநிதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரரினால் பிரதமரிடம் வழங்கிவைகப்பட்டது.
இந்நிகழ்வு நாராஹேன்பிட அபயராம விகாரையின் மண்டபத்தில் இடம்பெற்றது.
பேராசிரியர் இந்துறுகாரே தம்மரதன தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.