தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான கபடி போட்டிகளில் இலங்கை அணி, பங்களாதேஷ் அணியை வீழ்த்தி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானை தோல்வியடையச் செய்திருந்தது.
இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற இலங்கை அணிக்கு வாய்ப்பிருந்த நிலையில், அந்த அணியை 35-20 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.