தெற்காசிய விளையாட்டு விழாவின் T20 கிரிக்கெட் தொடரில் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆடவர் T20 கிரிக்கெட் தொடரின் இறுதி குழுநிலை போட்டியாக அமைந்த மோதலில் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி பங்களாதேஷிற்கு எதிராக 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினை பதிவு செய்ததோடு, தொடரில் எப்போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக இறுதிப் போட்டிக்கும் தெரிவானது.
குழுநிலை போட்டிகளின் முடிவில் இலங்கை ஆண்கள் அணி எதுவித தோல்வியுமின்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிர்த்திப்பூர் நகரில் ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் ஆடவர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்கள் குவித்தது.
இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி 16.1 ஓவர்களில் ஒரு விக்கட்டினை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றி இலக்கினை அடைந்தது.
இன்றைய தினம் இரு அணிகளுக்குமிடையிலான இறுதிப்போட்டி நடைபெறுகிறது.