திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களால் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு – அஜித் ரோஹன

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களால் உந்துருளிகளையும், முச்சக்கரவண்டிகளையும் கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மாத்தறை, மன்னார் மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில், நேற்றைய தினம் மூன்று உந்துருளிகள் கொள்ளையிடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன் தங்காலை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.