முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று நான்காவது ஆண்டுகளை கடந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க முல்லையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் முல்லைதீவில் புனித இராயப்பர் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது நகரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.