ஹொரணை -மில்லாவ பகுதியில் ஒளடத வலயம் ஸ்தாபிப்பதற்கு அனுமதி

Prescription Drugs.width 1000.format jpeg
Prescription Drugs.width 1000.format jpeg

எதிர்வரும் 2 முதல் 3 ஆண்டுகளில் இலங்கையின் ஒளடத தேவையில் 50 சதவீதத்தை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது.

இதற்கமைய, ஹொரனை மில்லாவ பகுதியில் ஒளடத வலயம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த ஒளடத வலையத்தின் ஊடாக புற்றுநோய் தடுப்பு மருந்துகள், என்பியல் நரம்பியல், இதய அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் கண் வில்லை ஆகியனவற்றையும் உற்பத்தி செய்வதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களாக ஆரம்பிக்கவுள்ள இந்த திட்டத்தின் முதல் கட்ட பணிகளுக்காக 8 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.