சிறைச்சாலைகளுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு சோதனை

iavks 293206
iavks 293206

சிறைச்சாலைகளுக்கு கைதிகளை பார்வையிடுவதற்கு வருகை தரும் அனைத்து வௌிநபர்களையம் பரிசோதிப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி அனைத்து வெளிநபர்களும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னரே உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கை நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அரசியல் சலுகைமூலம் கைதிகளை பார்வையிடுவதற்கு சிறைச்சாலைகளுக்கு வருகைதரும் அனைத்து அரசில்வாதிகளும் சோதனைக்குட்படுத்தப்படுவார்கள் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிடுவதற்கு சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா நிழற்படம் எடுத்தமை தொடர்பில் சிறைச்சாலை அதிகாரி நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.