பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 27 பேர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் இந்தோனேசியாவை உலுக்கியுள்ளது.
இந்தோனேசியாவின் சுமேதாங் மாவட்டத்தில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், டாசிக்மலாயா மாவட்டத்தில் உள்ள புனித தலத்துக்கு நேற்று முன்தினம் சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
இங்கு வழிபாடுகளை முடித்து விட்டு வீடு திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்தின் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் போனதே விபத்துக்கான பிரதான காரணம் என அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.