வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதியில் காவல்துறை விசேட அதிரடைப் படையினரின் சிறப்பு நடவடிக்கையில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் காத்தான்குடியில் வசிக்கும் 27 வயதுடையவர் ஆவார்.
அவரிடமிருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 20 மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் வாழைச்சேனை காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.