களஞ்சியசாலை ஒன்றிலிருந்து 4 ஆயிரத்து 195 கிலோ கழிவுத் தேயிலை மீட்பு

IMG20210319161731
IMG20210319161731

பூண்டுலோயா கும்பாலொலுவ பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த கழிவுத் தேயிலை களஞ்சியசாலை ஒன்றை சுற்றிவளைத்த தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர், 4 ஆயிரத்து 195 கிலோ கழிவுத் தேயிலையையும் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கழிவுத் தேயிலையை குறித்த நிலையத்துக்கு கொண்டுவந்து, தூய தேயிலை என்ற போர்வையில் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பட்டுள்ளன என விசேட அதிரடிப்படையினர் தகவல் வெளியிட்டர்.

அத்துடன், கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைகளின் நிமித்தம் பூண்டுலோயா காவல்துறையினரிடம் , விசேட அதிரடிப்படையினர் கையளித்தனர்.