இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை ஒத்திவைப்பு

download 34
download 34

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை (23)  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறல் தொடர்பான வாக்கெடுப்பு  இன்று (22) நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாக்கெடுப்பை ஒழுங்குப்படுத்துவது தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த வாக்கெடுப்பு  பிற்போடப்பட்டதாக ஜெனிவா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.