மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் மறைவு ஆழ்ந்த துயரளிக்கிறது!

Masthan
Masthan

மன்னார் ஆயர் உயர்திரு இராயப்பு ஜோசப் அவர்கள் காலமான செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றேன் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவருமான காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
மன்னார் மாவட்டத்தில் ஆயராக பணியாற்றிய காலப்பகுதியில் கத்தோலிக்க மக்களுக்கு மதரீதியான தலைமைத்துவத்தை சிறப்பாக வழங்கிய ஒருவராக அவரை நான் காண்கிறேன்.
அனைத்து இனமக்களோடும் ஒற்றுமையாகவும் நல்லிணக்கமாகவும் வாழவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பிறந்த அவர் தமிழுணர்வு மிக்கவர்.
தனது மக்களை மிகவும் நேசித்தவர்,வைத்தியரான அவரது தந்தையும் இனமத பேதமற்றவர், மக்களுடன் சகோதரத்துவ வாஞ்சையுடன் நடந்தவர்.இவ்வாறான பின்னணியைக் கொண்ட முன்னாள் மன்னார் மறை மாவட்ட ஆயர் உயர்திரு.இராயப்பு ஜோசப் ஆயரின் மறைவில் முழு மன்னார் மாவட்டமே வேதனையுற்றிருக்கிறது.

அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் ஆயர் இல்லத்தினர்,  குருமார்கள் மற்றும் உறவினர்கள் கத்தோலிக்க பெருமக்கள் அனைவருக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்