புலிகளை புகழ்ந்தால் அல்லது நினைவுகூர்ந்தால் உடன் சிறை – அஜித் ரோகண

ajith rohana1 1
ajith rohana1 1

தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்தும் நினைவுகூர்ந்தும் பகிரங்கமாகக் கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் அனைவரும் இனிமேல் தகுதி தராதரம் பாராது உடன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.

அதேவேளை, பத்திரிகைகள், இணையத்தளங்கள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் போற்றியும், அவர்களை நினைவுகூர்ந்தும் கருத்துக்களைப் பதிவிடுபவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளியோம். அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் காவல்துறையினரும் முப்படையினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்தும் நினைவுகூர்ந்தும் சிலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டடம் அமுலில் இருக்கின்றபோது இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் இனிமேல் உடன் கைதுசெய்யப்படுவார்கள்.

அதேவேளை, பத்திரிகைகள், இணையத்தளங்கள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் போற்றியும், அவர்களை நினைவுகூர்ந்தும் கருத்துக்களை பதிவிடுபவர்களும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்