நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 212 கொவிட் தொற்றாளர்களுள் அதிகமானவர்கள் குருநாகல் மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவர்களின் எண்ணிக்கை 33 ஆகும். இதேவேளை, களுத்துறை மாவட்டத்திலிருந்து 32 பேரும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 31 பேரும், கொழும்பு மாவட்டத்திலிருந்து 23 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 14 பேரும், புத்தளம் மாவட்டத்திலிருந்து 09 பேர் மற்றும் கண்டி மாவட்டத்திலிருந்து 6 பேரும் நேற்றையதினம் கொவிட் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.