முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ-9 வீதி மாங்குளத்தில் அமைந்துள்ள உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பினால் நடாத்தப்பட்ட சக்கரநாற்காலி கூடைப்பந்து போட்டி சிறப்புற இடம்பெற்றுள்ளது
![received 891821911382558](https://thamilkural.net/wp-content/uploads/2021/04/received_891821911382558.jpeg)
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ-9 வீதி மாங்குளத்தில் அமைந்துள்ள உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பானது வடக்கு கிழக்கில் உள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அனைவரையும் உள்வாங்கி தனது சேவைகளை முன்னெடுத்துவருகிறது
![received 456439908803363](https://thamilkural.net/wp-content/uploads/2021/04/received_456439908803363.jpeg)
அந்தவகையில் உயிரிழை அமைப்பானது முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோரது வாழ்வாதாரம் மருத்துவம் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தனது சேவையை முன்னெடுத்து வருகிறது
![received 181949020436135](https://thamilkural.net/wp-content/uploads/2021/04/received_181949020436135.jpeg)
அவ்வாறே தமது உறுப்பினர்களின் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முகமாக அவர்களுக்கிடையில் போட்டி நிகழ்வுகளையும் நடாத்தி வருகிறது அந்தவகையில் இவ்வாண்டுக்கான போட்டிநிகழ்வுகளை ரொட்றி கழகத்தின் அனுசரணையில் ஆரம்பித்திருக்கிறது
![received 576864676586174](https://thamilkural.net/wp-content/uploads/2021/04/received_576864676586174.jpeg)
இந்த போட்டிநிகழ்வுகளில் முதல் நிகழ்வாக சக்கரநாற்காலி கூடைப்பந்து போட்டி இடம்பெற்றுள்ளது தமது உறுப்பினர்களை அணிகளாக பிரித்து அவர்களுக்கிடையில் குறித்த போட்டி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது
![received 1932270273603517](https://thamilkural.net/wp-content/uploads/2021/04/received_1932270273603517.jpeg)
உயிரிழை அமைப்பின் தலைவர் ஸ்ரீகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த சக்கரநாற்காலி கூடைப்பந்து போட்டியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் கிளிநொச்சி ரொட்றி கழகத்தின் உறுப்பினர்கள் உயிரிழை அமைப்பின் அங்கத்தவர்கள் சமூக ஆர்வலர்களென பலரும் கலந்துகொண்டனர்