குருதிகொடையின் இரண்டாம் அலை பாக்கியம் அறக்கட்டளை மற்றும் சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் ஓமந்தை மத்தியகல்லூரியில் இன்று நடைபெற்றது.
இதன்போது ஏராளமான இளையோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு குருதி தானம் வழங்கி வைத்தனர்.
குருதி கொடையளித்தவர்களுக்கு ” உயிர்நேய மாண்பாளர் ” எனும் சான்றிதழும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பாக்கியம் அறக்கட்டளை அமைப்பினர் மற்றும் சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.