வவுனியாவில் தந்தைசெல்வாவின் நினைவுதின நிகழ்வுகள் வவுனியா மணிக்கூட்டுக்கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தைசெல்வா நினைவுத்தூபியில் இன்று காலை இடம்பெற்றது.
நிகழ்வில் தமிழரசுகட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் அன்னாரது சிலைக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் அதன்பின்னர்
ஏனையவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராஜா, ரி.கே.ராஜலிங்கம், தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.