பிராண வாயுவுக்கு தட்டுப்பாடு இல்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Oxyten
Oxyten

கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிராண வாயுவுக்கு நாட்டில் தட்டுப்பாடு இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

களுபோவில வைத்தியசாலையில், கொவிட்-19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிராண வாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக, பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் இன்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 நோயாளர்களுக்கு அவசியமான பிராண வாயுவுக்கு தற்போது வரையில் தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.