மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு கொவிட் பரிசோதனை!

111397315 gettyimages 1204793213 5
111397315 gettyimages 1204793213 5

மேல் மாகாணத்தில் இன்று (29) பிற்பகல் 12 மணி முதல் காவல்துறை, சுகாதார சேவைகள் மற்றும் முப்படையினர் இணைந்து  விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கும் மேல் மாகாணத்திற்கு வருவோருக்கும் 12 இடங்களில் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.