காவல்துறை உத்தியோகத்தர்கள் நால்வருக்கு கொரோனா

police 1
police 1

கிளிநொச்சி காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் நால்வருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே குறித்த காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையின் நிமித்தம் வெளிமாவட்டங்களுக்கு சென்று திரும்பியதன் பின்னர் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொற்றுறுதி செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் நால்வரையும் கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.