தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவி பணிப்பாளராக கடமையாற்றி வந்த திருமதி சறோஜா குகநேசதாசன் அவர்கள் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்ற நிலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.
இன்னிலையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான புதிய உதவிப்பணிப்பாளராக நாகலிங்கம் குகேந்திரா அவர்கள் இன்று முல்லைத்தீவில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்
இதுவரைகாலமும் கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியாக கடமையாற்றி வந்த திரு நாகலிங்கம் குகேந்திரா அவர்கள் இன்று முதல் முல்லைத்தீவு மாவட்டத்தின் உதவி பணிப்பாளராக நியமனம் பெற்று இன்று ஏ_9 வீதி மாங்குளத்தில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உடைய முல்லைத்தீவு மாவட்ட காரியாலயத்தில் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்