வவுனியாவில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மாடுகளுடன் நான்குபேர் கைது!

IMG 20210507 163122
IMG 20210507 163122

வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் கடத்திசெல்லபட்ட 20மாடுகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை யாழில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற வாகனம் ஒன்றை கனகராயன்குளம் பகுதியில் வழிமறித்த காவல்துறையினர் அதில் சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது குறித்த வாகனத்தில் போலியான அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி மாடுகள் கடத்திச்செல்லப்பட்டுள்ளமை தெரியவந்தது.

வாகனத்தில் இருந்தவர்களை கைதுசெய்த காவல்துறையினர் 16 மாடுகளையும் அவற்றை கடத்திச்செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றையதினம் உரிய நடைமுறைகளை பேணி கொண்டுசெல்லப்படாத நான்கு மாடுகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்திருந்தனர்.

கைது செய்யபட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.