குருந்தூர் மலை அத்துமீறல்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் – எம்.ஏ சுமந்திரன்

download 55
download 55

குருந்தூர் மலைப்பகுதியில் இடம்பெறும் அத்துமீறல்களுக்கு எதிராக, உயர்நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் வாரங்களில், இந்த வழக்கு, தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.