இலங்கை பூர்வீகமாகக் கொண்ட லூஷியன் பெர்னாண்டோ, பிரித்தானியாவின் கிழக்கு சஸக்ஸ் பிராந்தியத்தின் உள்ளூராட்சி உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பிரிந்தானியாவில் கடந்த 6 ஆம்திகதி இடம்பெற்ற தேர்தலில், ஆளும் கன்சவேர்ட்டிவ் (Conservative) கட்சி சார்பில் போட்டியிட்ட லூஷியன் பெர்னாண்டோ வெற்றிபெற்றுள்ளார்.
இலங்கையில் பிறந்த இவர், பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து, இராணுவம் மற்றும் அந்நாட்டு காவல்துறையிலும் பணியாற்றியிருந்தார்.
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளை பிரித்தானிய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுசென்று, எமது (பிரித்தானிய) அரசாங்கத்துடன் இணைந்து, இலங்கை அரசாங்கத்தோடு பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் லூஷியன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.