வவுனியாவில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய இருவர் கைது

IMG 20210517 WA0028
IMG 20210517 WA0028

வவுனியா சாந்தசோலை பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய இருவர் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த நபரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் நேரடி தொடர்பினை பேணிய அயல்வீட்டை சேர்ந்த இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

எனினும் குறித்த அயல்வீட்டினை சேர்ந்த இருவரும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி வெளியில் உலாவித்திரிந்துள்ளனர். இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளிக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற மேற்பார்வை சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்ததுடன், காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தினர். அத்துடன் தனிமைப்படுத்தல் காலம் நிறைவு பெற்றதன் பின்னர் சட்டநடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பணித்தனர்.