இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளிற்கான அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது இறுதிப்போரில் கொல்லப்பட்ட அனைத்து உறவுகளின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆதரவாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டிருந்தனர்.