நாளை முதல் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடாது

train
train

எதிர்வரும் 28 ஆம் திகதிவரையான பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில், எந்தவொரு தொடருந்து சேவைகளும ்முன்னெடுக்கப்பட மாட்டாது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன இதனை தெரிவித்தார்.

கட்டுப்பாடுகள் நீக்கப்படும் காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தொடருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்