நாட்டில் 4,890 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ளனர்

தனிமைப்படுத்தல்
தனிமைப்படுத்தல்

நாடு முழுவதும் 64 தனிமைப்படுத்தல் மையங்களில் 4,890 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (21) காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அரசாங்கத்தின் கீழ் 35 தனிமைப்படுத்தல் மையங்களும், 29 தனியார் தனிமைப்படுத்தல் மையங்களும் காணப்படுகின்றன.

அரசாங்கத்தின் கீழ் இயங்கும் தனிமைப்படுத்தல் மையங்களில் 3,497 பேரும் சுற்றுலா விடுதிகளில் கட்டணம் செலுத்தி 1,393 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதேவேளை, இன்று (21) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 229 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது