மலேசியாவில் கொவிட்-19 தொற்றுறுதியாகின்றவர்களின் நாளாந்த எண்ணிக்கை இந்த மாத நடுப்பகுதியில் 13,000 கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, அமுல்படுத்தப்படுகின்ற முடக்கலை மக்கள் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என அந்த நாட்டு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அங்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொவிட்-19 தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கின்றது.
கடந்த 29ஆம் திகதி 9,000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
எனினும் தற்போது அந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.