ஈரானின் ஒரே அணுமின் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
ஈரான் மின்சார ஆற்றல் நிறுவனத்தைச் சோ்ந்த அதிகாரி கொலாமலி ரக்ஷானி அந்நாட்டு தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் பேசியபோது இத்தகவலை தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறியது: அவசரகால நடவடிக்கையாக அணுமின் நிலையம் சனிக்கிழமை மூடப்பட்டது. தொடா்ந்து மூன்று முதல் நான்கு நாள்கள் வரை மூடப்பட்டிருக்கும். இதனால் மின்தடை ஏற்படலாம் என்றாா் அவா்.
ரஷ்ய உதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்த அணுமின் நிலையம் மூடப்படுவதற்கான காரணம் என்ன என்று அவா் தெரிவிக்கவில்லை. ஆனால், கடலோர புஷ்ஷொ் நகரில் அமைந்துள்ள இந்த அணுமின் நிலையம் அவசரகால நடவடிக்கையாக மூடப்படுவது இதுவே முதல் முறை.