பெருந்தோட்ட மக்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தை மீள கைச்சாத்திடுவதே சிறந்த விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு ஒப்பந்தத்தினை மீள கைச்சாத்திட 5 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் தமக்கு அறிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.