வவுனியாவில் 30 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

கொரோனா
கொரோனா

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் இரவு (30.06) வெளியாகின.

அதில், தவசிகுளம் பகுதியில் பத்து பேருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், பூந்தோட்டம் பகுதியில் இருவருக்கும், பெரியார்குளம் பகுதியில் இருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் மூவருக்கும், கற்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிதம்பரம் பகுதியில் ஒருவருக்கும், ஆச்சிபுரம் பகுதியில் இருவருக்கும், மாமடு பகுதியில் மூன்று பேருக்கும், அலகல்ல பகுதியில் ஒருவருக்கும், பெரியஉளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், இறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், காவற்துறையினர் இருவருக்கும் என 30 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.