தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா சசி.
தமிழை விட மலையாளத்தில் சோட்டா மும்பை, தலப்பாபு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு என பல படங்களில் நடித்துள்ளார்.
சில வருடத்திற்கு முன் மூளையில் கட்டி ஏற்பட அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. பதினொரு அறுவை சிகிச்சை பெற்று உயிர் பிழைத்த அவர் தற்போது கொரோகாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறாராம்.
செயற்கை சுவாசம் வைக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.