மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
சின்னஊறணி 3ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த தரம் 2 கல்வி கற்றுவரும் 6 வயதுடைய விநாயகம் விதுஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் வசித்து வந்த வீடு உடைக்கப்பட்டு புனர்நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருகின்றது இந்த நிலையில் வீட்டிற்கு அருகில் தாயார் அவரது சகோதரி மற்றும் 3 பிள்ளைகளுடன் உறவினர் வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகின்றனர்.
சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (13) மாலை 6 மணியளவில் புனர்நிர்மாணப் பணிகளை பார்க்க சென்றபோது வீட்டில் மின்சார வேலைகள் இடம்பெற்ற நிலையில் வயர் ஒன்றை குறித்த சிறுவன் பிடித்ததையடுத்து மின்சாரம் தாக்குதலுக் குள்ளானதையடுத்து உறவினர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவையடுத்து சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்