பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 14 பேருக்கு கொரோனா

corona 1
corona 1

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 14 பேருக்கு தொற்று உள்ளமை இன்றைய பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 வர்த்தகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

மேலும் 40 பேரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 7 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் வங்கி முகாமையாளர், வங்கி ஊழியர் ஒருவர்,  நகர சபை ஊழியர்கள் இருவர் மற்றும்  பொதுமக்கள் மூவர் அடங்குகின்றனர்.

பருத்தித்துறை நகர் நேற்றிரவு முதல. முடக்கப்பட்டு வங்கிகள் மட்டும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.