முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கிருமி நீக்கும் இயந்திரங்கள் வழங்கி வைப்பு!

received 395242948689391
received 395242948689391

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு சுமார் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள் நேற்று (15) மாலை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளை நோய்த் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக 21இலட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உமாசங்கரிடம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைத்து மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ குறித்த பொருட்களை கையளித்தார்.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் ஜேசு ரெஜினோல்ட் , முல்லைத்தீவு மாவட்ட உதவி பிரதேச செயலாளர் திருமதி.எல்.கேகிதா வைத்திய அதிகாரிகளான வைத்தியர் திரு.சோபன் வைத்தியர் திரு.விதுரன் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.