மட்டு வெல்லாவெளியில் கனரக வாகனம் மோதியதில் மாடுகள் படுகாயம்

WhatsApp Image 2021 07 16 at 12.10.30 1
WhatsApp Image 2021 07 16 at 12.10.30 1

மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்துறை பிரிவிலுள்ள அம்பிளாந்துறை வெல்லாவெளி வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் மாடுகளுடன் கனரக வாகனம் மோதிய விபத்துக்குள்ளானதில் மாடு ஒன்று உயிரிழந்துள்ளதுடன் 12 மாடுகள் படுகாயமடைந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (16) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த வீதியால் சம்பவதினமான இன்று அதிகாலை கனரக வாகனத்தில் கல் ஏற்றிக் கொண்டு வேகமாக பயணித்த போது வீதியில் குறுக்கு நின்ற மாடுகளுடன் மோதிவிபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் ஒரு மாடு உயிரிழந்ததுடன் 12 மாடுகள் படுகாயமடைந்தன.

இதனையடுத்து குறித்த வாகனத்தை காவல்துறையினர் கைப்பற்றி காவல் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.