சுற்றுலாத்துறை சார்ந்தோருக்கு மொடெர்னா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று சிகிரியாவில் ஆரம்பமாகின.
இதன்படி, சிகிரியாவில் உள்ள சுற்றுலாத்துறை சார்ந்த 2ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை வர்த்தகர்கள், சுற்றுலா சாரதிகள், சுற்றுலா வழிகாட்டிகள், பொருள் விநியோகத்தர்கள் மற்றும் இசைக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெறவுள்ளன.