நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் இன்று (30) தோண்டி எடுக்கப்பட இருக்கின்றது.
குறித்த சிறுமியின் சடலம், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கு அமைவாக தோண்டி எடுக்கப்பட்டு, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்ந்த நீதவான் லக்சிகா குமாரி ஜயரத்ன, விசேட வைத்திய குழுவின் முன்னிலையில் இன்று காலை 8.30 அளவில் சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.