வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 வருடங்களுக்கு மேலாகியும் இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இனிமேலும் தங்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்கடலினுள் மூழ்கி உயிரை விடுவதாகவும் குறிப்பிட்டனர்.
குறித்த போராட்டம் யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி திருமதி சிவபாதம் இளங்கோதை தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.